Pages

Saturday, January 21, 2012

மௌனம் களைவாயோ...

அது ஒரு முன்பனி காலை நேரம்
பனி மூடிய தனிமையில் பார்த்தேன் என்னவளை
துயில் கொண்டு எழுந்தவளை, குளிரும் விடியல் பொழுதினிலே . . .
யாரும் இல்லா தனிமையில் - அவளும் நானும்
நாணி நின்றாள் நான் கொடுத்த முத்தத்தில்

“ நனைந்து விட்டதோ உன் இதழ்கள் வெக்கத்தில் . . .
பகலவன் கதிர் பட்டு பிரகாசிக்கும் உன் கன்னம்
காட்டுகிறது எனக்குள்ளாய் பல கனவு, பட்டாம் பூச்சிகளோடு  
உன் நினைவாய் இருக்கிறேன் என்னை அறியாமல் - நாள்முழுதும்
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் உனக்குத் தெரியாமல்

நான் வாழ நம்பிக்கை கொடுத்தவளே
என் வாழ்விற்கு அர்த்தம் தந்தவளே 
என் சுவாசமாய் இருக்கிறது உன் வாசம்
வாராயோ என்னோடு சேர்ந்து ஆடாயோ
தாராயோ உன் இதயம் உன் இதயம் . . .

மௌனம் களைவாயோ உன் வாய் திறந்து கூறாயோ
உன் காதல் நான்தான் என்று - ஓ !! பூவானவளே !!!

இப்படிக்கு
தென்றல் . . .

6 comments:

  1. Pinnita.. Enna machi panrathellam nee pannittu thendral mela pazhi pottu vachirukka..???

    ReplyDelete
    Replies
    1. Ha ha ha.. Really it is thendral only da kannaa.. I didnt do anything.. Thanks da kannaa.. ;-)

      Delete
  2. :) inimaiyana kavithai..... vaazhthukkal deepak !

    ReplyDelete
  3. Aazhntha Sinthanaigal... oru pudhumaiyana mugathai paarkiraen unn pudhumaiyana kavidhayin moolam....

    ReplyDelete
  4. அருமையான கற்பனை !!

    ReplyDelete